தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுவது உண்மையில் ஓர் அதிசயம். ஏப்ரல் 19 முதல் 642 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தியப் பொருளாதாரத்தின் வரலாற்று மறுகட்டமைப்பைப் பிரதமர் மோடி மேற்பார்வையிட்டுள்ளார். இது இந்தியக் குடிமக்களுக்கும், பிராந்தியத்திற்கும் சிறந்த வாழ்க்கையை உறுதியளிக்கிறது. மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் போது அவருடன் நெருக்கமாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.