புதைபடிம எரிபொருள் துறைக்கான காலம் குறைந்த அளவுதான் உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். மேலும் மாற்று எரிபொருளால் ஈடு செய்யப்பட வேண்டும். எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாத, ஆனால் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து எரிசக்திப் பயன்பாட்டையும் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கான பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி உலகின் முன்னிலையில் இருக்கிறார். அவரின் மனிதாபிமான முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்தேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை உலக அளவில் எடுத்துச் செல்ல முடிந்துள்ளது.