மதிப்பிற்குரிய இந்தப் பிரதமருடனான எங்கள் சந்திப்பில் பல விசயங்களைப் பற்றி பேசினோம். அவர் மிகவும் அன்பாகவும், மரியாதையுடன் எல்லாவற்றையும் கேட்டார். நாங்கள் இசையைப் பற்றிப் பேசினோம். அவர் எனக்கு மிகவும் பிரபலமான பாடலான ‘நாட்டுநாட்டு’பாடல் குறித்து எடுத்துரைத்தார். எனவே, நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கான்பூரைச் சேர்ந்த என் தாயாரைப் பற்றியும் பேசினோம். இது எனக்கு ஒரு அழகான சந்திப்பாகும். நான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு வெளியேறிய பின் நான் பேசிய முதல் நபர் எனது தாயார் ஆவார். நான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததில் எனது தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.