பிரதமர் நரேந்திர மோடி அதிசயிக்கத்தக்க மனிதர். அவரைச் சந்தித்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டம் அடைந்துள்ளதாக உணர்கிறேன். அவர் உண்மையிலேயே தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா மீது அக்கறை கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. பிரதமர் நரேந்திர மோடி அதீத செல்வாக்கு கொண்ட நபர். எளிமையான பின்னணியில் இருந்து வந்து, நாட்டின் தலைவராக உயர்ந்துள்ள அவர் அபாரமான பணிகளைச் செய்துள்ளார். உண்மையில் மக்களை சிறந்த பாதையில் அழைத்துச் சென்றுள்ளார். இன்று அவருடனான உரையாடலில் அவர் எவ்வளவு ஆளுமைமிக்கவர் என்பதை உணர்ந்தேன்.