திரு.அமித் ஷா, தேசியத் தலைவர், பாரதீய ஜனதா கட்சி
மக்களுக்காக பணியாற்றுவதும், மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பை இறைவன் அளித்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதும் திரு.மோடி அவர்களின் பழக்கமாகும். வளர்ந்த நகரம் மற்றும் கிராமத்திற்கு இடையே எவ்வித வேறுபாடும் இருக்கக் கூடாது, அதனை பிரதமர் திரு.மோடி நிரூபித்துள்ளார். பிரதமர் திரு.மோடி அவர்கள், குஜராத்தின் முதல்வராக இருந்தவரை, மாநிலத்தின் வளர்ச்சி 12 சதவீதமாகும். இன்று அவர் பெற்றுள்ள மகத்தான வெற்றியானது, 12 ஆண்டுகள் அவர் ஆற்றிய கடினமான உழைப்பின் காரணமாகும். திரு.நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தின் முதல்வராக இருந்ததை போன்றே தற்போதும் உள்ளார். அவரது ஆளுமை, கலைத்திறன் மற்றும் தலைமைப்பண்புகள் ஆகியவை அனைவரின் பார்வையையும் கவர்ந்துள்ளன.