பிரையன் பி ஷ்மிட், நோபல் பரிசு பெற்றவர்
உண்மையில் எனக்கு உற்சாகமாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் நாம் எவ்வாறு இணைந்து பணியாற்றலாம்? என்பது குறித்து எல்லாம் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி மிகச் சிறப்பாக விளக்கினார். உலகத்தரம் வாய்ந்த அறிவியல் பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியா திறன் பெற்றுள்ளது. எனது வாழ்நாளில் இந்தியா கண்ட சிறந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என உறுதியாகக் கூறுவேன். அவருடன் பேசும்போது அவர் மிகுந்த ஆளுமையுள்ளவர் என்பதை உணர்கிறேன். மக்கள் மீது உண்மையிலேயே அவர் அக்கறை காட்டுகிறார் என்பதை என்னால் உணர முடிகிறது.