இந்தியாவில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதை நான் வரவேற்கிறேன். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி @NarendraModi, பிஜேபி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துகள். இந்திய மக்களின் அமைதி மற்றும் செழிப்பிற்கு வாழ்த்துகிறேன், நமது நாடுகளுக்கு இடையே தொடர்ந்து ஒத்துழைப்பு மேம்படும் என்று நம்புகிறேன். இந்தியாவும், உக்ரைனும் பொதுவான மதிப்புகளையும், வளமான வரலாற்றையும் பகிர்ந்து கொள்கின்றன. நமது கூட்டாண்மை தொடர்ந்து செழித்து, நமது நாடுகளுக்கு முன்னேற்றத்தையும், பரஸ்பர புரிதலையும் கொண்டு வரட்டும். உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் உலகில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். அனைத்து நாடுகளுக்கும் நியாயமான அமைதியை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், அமைதி உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.