பி.எம்.இந்தியா
நெட்ஃபிளிக்ஸ் இணை தலைமைச் செயல் அதிகாரி திரு டெட் சரண்தாஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது பேசிய திரு மோடி இந்தியா வளமான கதை சொல்லல் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதாகவும், சிறந்தப் படைப்புத்திறன் உள்ளவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதைப் படைப்பாக்கத்திற்கான உலகளாவிய மையமாக நமது நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
திரு டெட் சரண்தாஸைச் சந்தித்தது மகிழ்ச்சி. இந்தியாவின் ஊடகம், பொழுதுபோக்குத் துறையின் பெரும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தோம்.
இந்தியா வளமான கதை சொல்லல் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, சிறந்தப் படைப்புத்திறன் உள்ளவர்கள் இருக்கின்றனர். இதைப் படைப்பாக்கத்திற்கான உலகளாவிய மையமாக நமது நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
***
(Release ID: 2295291)
TV/IR/SM/SH
Glad to have met Mr. Ted Sarandos. Discussed the immense potential of India’s media and entertainment sector.
— Narendra Modi (@narendramodi) August 5, 2026
India has a rich tradition of storytelling and an extraordinary pool of creative talent, which can be leveraged to strengthen our nation’s position as a global hub for… https://t.co/8ufUEddPTv