Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒருவருடைய வாழ்க்கையை ஒளிமயமாக்கி குணநலன்களை உருவாக்கக்கூடிய எட்டு அத்தியாவசியப் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


ஒருவருடைய வாழ்க்கையை ஒளிமயமாக்கி குணநலன்களை உருவாக்கக்கூடிய எட்டு அத்தியாவசியப் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

இந்த எட்டு பண்புகளும் ஒருவருடைய வாழ்க்கையை ஒளிமயமாக்குகிறது. ஞானம் அவருக்கு சரியான பாதையைக் காட்டுகிறது. நன்னடத்தை அவரது குணநலனைத் தூய்மையாக வைக்கிறது. சுயகட்டுப்பாடு அவரை ஒழுக்கத்துடன் இருக்கச் செய்கிறது. அறிவு அவருக்கு புரிதலை ஏற்படுத்துகிறது. துணிச்சல் கடினமான தருணத்தில் உறுதியுடன் நிற்க உதவுகிறது. திறன்மிக்க பேச்சு சமூகத்தில் அவருக்கு மரியாதையை ஏற்படுத்துகிறது. ஒருவருடைய திறனுக்குகேற்ப அளிப்பதும் கருணைக்கு நன்றியுடன் இருப்பதும் ஒருவரை முழுமையடையச் செய்கிறது.

***

(Release ID: 2297448)

SS/IR/PS/KR