Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சமூக வளர்ச்சிக்கான கூட்டு உறுதிப்பாடு, ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


நாட்டின் வளர்ச்சி, சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கூட்டு உறுதிப்பாடு, எண்ணங்களின் ஒற்றுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

நமது அனைவரது உறுதிப்பாடும் ஒன்றாக இருக்க வேண்டும், நமது எண்ணங்கள் ஒற்றுமை உணர்வுடன் இணைக்கப்பட வேண்டும், அதனால், பரஸ்பர ஒத்துழைப்பு, சமமான அணுகுமுறையின் மூலம் நாம் அனைவரும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட முடியும்.

***

Release ID: 2300271

SS/IR/LDN/KR