Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையம்- பிரதமர் நாளை தொடங்கி வைப்பார்


புதுதில்லியில், எண் 15 ஜன்பத்சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். டாக்டர். அம்பேத்கர் சமூக பொருளாதார மாற்றத்திற்கான சர்வதேச மையத்தையும் (DAICSET) பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

“நாளை காலை 11-க்கு நான் தில்லியில், 15 ஜன்பத்தில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை தொடங்கி வைக்க உள்ளேன். இந்த நிகழ்வு எனக்கு மிகவும் சிறப்பானது. இந்த மையத்திற்கான அடிக்கலை நாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நமது தலை நகரத்தின் மைய பகுதியில் இது அமைவது டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அளிக்கும் சிறந்த மரியாதை ஆகும்.

டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையம் புத்த மற்றும் தற்போதய கட்டிடக் கலையின் கலவை ஆகும். இதில் கருத்தரங்க மற்றும் கூட்டங்களுக்கான அரங்குகளும் உண்டு. இதில், மூன்று அரங்கங்கள் மற்றும் கணினி களஞ்சியத்துடனான பெரிய நூலகம் அமைந்து உள்ளது.

நாளை டாக்டர். அம்பேத்கர், சமூக பொருளாதார மாற்றத்திற்கான சர்வதேச மையம் தொடங்கி வைக்கப்படும். இந்த நிறுவனம், முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்களுக்கு வழி வகுத்து, ஆய்வை ஊக்குவித்து, இளைஞர்கள் இடையே அசல் சிந்தனையை தூண்ட வழிவகுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***