Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.

”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.

”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.

”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.


இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்ற அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல் என்ற திட்டத்தின் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பிரதமர் பதிலளிக்கவும் செய்தார். இந்தக் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ரயில்வே நிலையத்தில் இருந்த நபர் நரேந்திர மோடி ஆவார். லண்டனில் அரச மாளிகையில் இருப்பவர் 125 கோடி இந்தியர்களின் சேவகர் ஆவார்.

ரயில்வே நிலையத்தில் நான் வாழ்ந்த  வாழ்க்கை எனக்கு நிறைய விஷ்யங்களைக் கற்றுகொடுத்தது. இது எனது சொந்தப் போராட்டங்கள் பற்றியது. அரச மாளிகை என்று நீங்கள் சொல்லும்போது அது என்னைப் பற்றியது அல்ல. 125 கோடி இந்திய மக்களைப் பற்றியது.

ஆசைப்படுவது  என்பது மோசமான விஷயம் அல்ல. ஒருவரிடம் ஒரு சைக்கிள் உள்ளது என்றால். அவர் ஸ்கூட்டருக்கு ஆசைப்படுவார். ஒரு நபரிடம் ஸ்கூட்டர் இருந்தால் அவர் காருக்கு ஆசைப்படுவார். ஆசைப்படுவது இயல்பானதுதான். இந்தியா மேலும் மேலும் ஆசைப்படும் நிலைக்கு வந்துள்ளது.

வரலாற்றுப் புத்தங்களில் இடம் பெறும் நோக்கத்துடன் நான் பிறக்கவில்லை. உங்கள் அனைவரையும் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால் எங்களது நாட்டை நினைவில்கொள்ளுங்கள், மோடியை அல்ல.  நான் உங்கள் அனைவரையும் போல ஒருவன், இந்தியாவின் ஒரு சாதாரணக் குடிமகன்.

     ஆம் மக்கள் எங்களிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.   ஏனென்றால், நாங்கள் அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என்று அவர்கள் அறிவார்கள்.  ஏதாவது ஒன்றைச் சொன்னால், அதனை அரசு செவிமடுத்துச் செய்து முடிக்கும் என்று மக்கள் அறிவார்கள்.

     சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தியடிகள் வித்தியாசமான பல விஷயங்களைச் செய்தார்.  சுதந்திரப் போராட்டத்தை அவர் வெகுஜன இயக்கமாக மாற்றினார்.  மக்கள் எதைச் செய்தாலும் அது இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் ஒவ்வொருவரிடமும் எடுத்துரைத்தார்.

     மேம்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதே இன்றைய காலகட்டத்தின் அவசியம் ஆகும்.

     பங்கேற்பு ஜனநாயகம் நல்ல ஆளுகையைச் சாத்தியமாக்குகிறது.

     இந்தியாவின் வரலாற்றை திரும்பிப் பாருங்கள்.  இந்தியா ஒருபோதும் பிறரது நிலப்பரப்பை விரும்பியது கிடையாது. முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் சமயங்களில் எங்களுக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாமல் இருந்த நிலையிலும், எங்களது வீரர்கள் அந்தப் போர்களில் பங்கேற்றனர்.   அந்தப் போர்களில் பெரிய தியாகங்களையும் அவர்கள் செய்தனர். ஐநாவின் அமைதிக் காப்புப் படைகளின் பங்கினைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள்.

     நாங்கள் அமைதியில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்பவர்களை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது.  நாங்கள் அவர்களுக்கு வலுவான பதிலடியை அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே அளிப்போம்.  பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

     இந்தியா மாறிவிட்டது, அவர்களது விஷமச் செயல்கள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதையே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்ய விரும்புவோருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

     வறுமையைப்  புரிந்துகொள்ள புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  நான் வறுமையில் வாழ்ந்தவன்.  ஏழையாக இருப்பது எத்தகையது என்பதை நான் அறிவேன்.  நான் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவினைச் சேர்ந்தவன்.  ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், வாய்ப்பு வசதிகள் அற்றோர் ஆகியோருக்காக உழைக்க நான் விரும்புகிறேன்.

     18,000 கிராமங்களில் மின்சார வசதி இல்லை. அநேகப் பெண்களுக்குக் கழிவறை வசதிகள் இல்லை. எமது நாட்டின் இந்த உண்மைநிலவரங்கள் என்னைத் தூங்கவிருபதில்லை. இந்தியாவின் ஏழைமக்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவருவதில் நான் உறுதியாக உள்ளோன்.

     நான் சாதாரண குடிமக்கள் எவரையும் போன்றவன். மேலும் சாதாரண மக்களைப் போன்ற குறைபாடுகள் என்னிடமும் உண்டு.

     எம்மிடையே பல லட்சம் பிரச்சனைகள் உள்ளன.  ஆனால், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கும் எம்மிடையே 100 கோடி பேர் உள்ளனர். 

     லண்டனில் நான் செய்ய விரும்பிய விஷயங்களில் ஒன்று பகவான் பசவேஸ்வராவுக்கு அஞ்சலி செலுத்துவதுதான்.

     இந்தியாவின் 125 கோடி மக்களும் என்னுடைய குடும்பம்தான்.

     இந்தியப் பிரதமர்கள் இஸ்ரேல் செல்வதற்குத் தடையாக இருந்தது எது? ஆம், நான் இஸ்ரேல் நாட்டுக்குச் செல்வேன். மேலும் பாலஸ்தீன நாட்டுக்கும் செல்வேன். சவுதி அரேபியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவேன்.  இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்காக ஈரான் நாட்டுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வேன்.

     ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் இல்லாமல் ஜனநாயகம் வெற்றி பெற முடியாது.

     இந்த அரசை அனைவரும் விமர்சனம் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.  விமர்சனங்கள்தான் ஜனநாயகத்தை வலுவானதாக மாற்றுகின்றன.

     எனது பிரச்சனை விமர்சனத்துக்கு எதிரானது அல்ல. விமர்சனம் செய்வதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு சரியான உண்மைகளைக் கண்டறிய வேண்டும். ஆனால், அது தற்போது நடைபெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதற்குப் பதிலாக,  இப்போது நடப்பதெல்லாம் குற்றம்சாட்டுவதுதான்.

     வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறும் நோக்கத்துடன் நான் பிறக்கவில்லை.  உங்கள் அனைவரையும் நான் வேண்டிக்கொள்வது எமது நாட்டை நினைவில்கொள்ளுங்கள், மோடியை அல்ல.  நான் உங்களைப்போல ஒருவன், சாதாரண இந்திய குடிமகன்.

*****