Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாமில் வெள்ள சூழ்நிலைக் குறித்து அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் ஆய்வு செய்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி அசாம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெள்ள சூழ்நிலைக் குறித்து விவாதித்தார்.

அசாம் அரசுடன் மத்திய அரசு நெருக்கமுடன் பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக திரு.மோடி பிரார்த்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி தெரிவித்திருப்பதாவது;

“அசாம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெள்ளச் சூழ்நிலை குறித்து விவாதித்தேன்.

அசாம் அரசுடன் மத்திய அரசு நெருக்கமாக பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது.  அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

***

(Release ID: 2290315)

TV/IR/KPG/KR