பி.எம்.இந்தியா
இயற்கையோடு சமநிலையுடன் வாழ்வதை பின்பற்றுவதன் மூலம், அனைத்து உயிரினங்களின் நலன்களை அடைவதே நமது கலாச்சாரத்தின் முக்கியக் கொள்கையாக உள்ளது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இந்த விரிவான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா தற்போது வளர்ச்சி, வளமைப் பாதையில் தொடர்ந்து முன்னேறுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
நான்கு திசைகளின் பரந்த எல்லைகளையும், கூர்மையான விழிப்புணர்வுடன் கூடிய பார்வையையும் கொண்ட வளமையை நாம் அடைவோம். அதில் இயற்கையோடு முழுமையான இணக்கத்துடன் வாழ்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அனைத்து உயிரினங்களின் நிலையான நல்வாழ்வும் உறுதி செய்யப்படுகிறது.
***
Release ID: 2270126
SS/IR/LDN/PD
प्रकृति के साथ संतुलन बिठाकर समस्त जीवों का कल्याण हो, यही हमारी संस्कृति की मूल भावना रही है। इसी व्यापक दृष्टि से आज भारतवर्ष प्रगति और समृद्धि के पथ पर निरंतर आगे बढ़ रहा है।
— Narendra Modi (@narendramodi) June 8, 2026
यावच्चतस्रः प्रदिशश्चक्षुर्यावत् समश्नुते।
तावत् समैत्विन्द्रियं मयि तद्धस्तिवर्चसम्॥ pic.twitter.com/RelovuuzKx