பி.எம்.இந்தியா
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
நான் ‘வெற்றிக் கொண்டாட்டங்கள்’ பற்றிப் பேசும்போது, அது பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கியதன் கொண்டாட்டம் என்று நான் கூற விரும்புகிறேன். இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் வலிமையைப் பற்றிப் பேசுகிறேன். 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டையும், அந்தக் கூட்டு விருப்பத்தின் வெற்றியையும் நான் குறிப்பிடுகிறேன்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை அவர்களின் மதம் என்ன என்று கேட்டு சுட்டுக் கொன்றது, கொடுமையின் உச்சம். இது நாட்டில் கலவரத்தைத் தூண்டும் ஒரு சதி. இன்று, தேசம் அந்த சதித்திட்டத்தை ஒற்றுமையுடன் முறியடித்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
ஏப்ரல் 22 க்குப் பிறகு, நான் ஒரு பொது அறிக்கையை வெளியிட்டேன், பயங்கரவாதிகளை தூசியாக மாற்றுவோம் என்று நான் சொன்னேன். மேலும் அவர்களின் மூளையாக இருப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள், கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள் என்று நான் பகிரங்கமாகக் கூறினேன். ஏப்ரல் 22 அன்று, நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் உடனடியாகத் திரும்பி வந்தேன், வந்தவுடன், ஒரு கூட்டத்தை நடத்தினேன். அந்தக் கூட்டத்தில், தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன: பயங்கரவாதத்திற்கு தீர்க்கமாக பதிலளிக்க வேண்டும், இது நமது தேசத்தின் உறுதி.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
நமது ராணுவத்தின் வெற்றிக்குப் பின்னால் பாரதத்தின் கண்ணோட்டத்தை சபைக்கும், பாரத மக்களுக்கும் முன் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாரதம் முக்கிய நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் ராணுவம் உணர்ந்தது. பாகிஸ்தான் அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுக்கத் தொடங்கியது. ஆனாலும், மே 6 இரவு மற்றும் மே 7 காலை திட்டமிட்டபடி பாரதம் நடவடிக்கையை மேற்கொண்டது, பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. வெறும் 22 நிமிடங்களில், துல்லியமான இலக்குகளுடன் நமது ராணுவம் ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பழிவாங்கியது. இரண்டாவதாக, மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, நாம் இதற்கு முன்பு பல முறை பாகிஸ்தானுடன் போரிட்டுள்ளோம், ஆனால் இதுபோன்ற ஒரு உத்தியை பாரதம் செயல்படுத்தியது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு சென்றிராத இடங்களை அடைந்தோம். பாகிஸ்தானின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் பயங்கரவாத முகாம்கள் சாம்பலாக்கப்பட்டன. பஹாவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
நமது படைகள் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழித்துவிட்டன. மூன்றாவதாக, பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் வெற்று என்பதை நாங்கள் அம்பலப்படுத்தினோம். அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை பாரதம் நிரூபித்துள்ளது, மேலும் இதுபோன்ற உத்திகளுக்கு முன் பாரதம் ஒருபோதும் தலைவணங்காது.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
நான்காவதாக, பாரதம் தனது தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தியது. பாகிஸ்தானின் மையப்பகுதியில் துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். அவர்களின் விமானப்படை தள சொத்துக்கள் பெரும் சேதத்தை சந்தித்தன, இன்றுவரை, அவர்களின் பல விமானப்படை தளங்கள் இன்னும் ஐ.சி.யுவில் உள்ளன. இது தொழில்நுட்பம் சார்ந்த போரின் சகாப்தம், மேலும் ஆபரேஷன் சிந்தூர் அந்த களத்திலும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது, ஆபரேஷன் சிந்தூரின் போது முதன்முறையாக, உலகம் ‘தற்சார்பு இந்தியாவின்’ வலிமையை அங்கீகரித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பாகிஸ்தானின் முழு பாதுகாப்பு அமைப்புமுறையின் பலவீனங்களையும் அம்பலப்படுத்தின.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
பாரதம் மூன்று கொள்கைகளை வரையறுத்துள்ளது என்பதை ஆபரேஷன் சிந்தூர் மிகத் தெளிவாகக் கூறுகிறது: பாரதத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், நாம் நமது சொந்த வழியில், நமது சொந்த விதிமுறைகளின்படி, நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் பதிலடி கொடுப்போம். அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது. மூன்றாவதாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசுகளுக்கும் பயங்கரவாத மூளையாக இருப்பவர்களுக்கும் இடையில் நாம் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம்.
எனது காங்கிரஸ் சகாக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: பாரதத்தின் இந்த வெற்றி தருணத்தை தேசிய கேலிக்குரிய தருணமாக மாற்றாதீர்கள். காங்கிரஸ் தனது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். இன்று, இந்த அவையில் நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்: பாரதம் இப்போது பயங்கரவாதிகளை அவர்களின் தொடக்கத்திலிருந்தே ஒழிக்கும். பாகிஸ்தானை பாரதத்தின் எதிர்காலத்துடன் விளையாட விடமாட்டோம். ஆப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை, அது தொடர்கிறது. இது பாகிஸ்தானுக்கான ஒரு அறிவிப்பு: அவர்கள் பாரதத்திற்கு எதிரான பயங்கரவாதப் பாதையை நிறுத்தும் வரை, பாரதம் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துக்கொண்டே இருக்கும். பாரதத்தின் எதிர்காலம் பாதுகாப்பாகவும் வளமாகவும் இருக்கும் – இதுவே எங்கள் உறுதி. இந்த மனப்பான்மையுடன், அர்த்தமுள்ள விவாதத்திற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, பாரதத்தின் நிலைப்பாட்டை முன்வைத்து, பாரத மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினேன். இந்த அவைக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149989
*****
(Release ID: 2149989)
AD/BR/DL
Speaking in the Lok Sabha.
— Narendra Modi (@narendramodi) July 29, 2025
https://t.co/5YMO8qcisH
मैं भारत का पक्ष रखने के लिए खड़ा हुआ हूँ: PM @narendramodi in Lok Sabha pic.twitter.com/jSpcNQmszn
— PMO India (@PMOIndia) July 29, 2025
A Vijay Utsav of the valour and strength of the Indian Armed Forces. pic.twitter.com/6yjYhsLqVc
— PMO India (@PMOIndia) July 29, 2025
Operation Sindoor highlighted the power of a self-reliant India! pic.twitter.com/CWKAQzfzEv
— PMO India (@PMOIndia) July 29, 2025
During Operation Sindoor, the synergy of the Navy, Army and Air Force shook Pakistan to its core. pic.twitter.com/GZMPpfz5KN
— PMO India (@PMOIndia) July 29, 2025
India has made it clear that it will respond to terror on its own terms, won't tolerate nuclear blackmail and will treat terror sponsors and masterminds alike. pic.twitter.com/r4T3mBUWs4
— PMO India (@PMOIndia) July 29, 2025
During Operation Sindoor, India garnered widespread global support. pic.twitter.com/SN56e2DUsw
— PMO India (@PMOIndia) July 29, 2025
Operation Sindoor is ongoing. Any reckless move by Pakistan will be met with a firm response. pic.twitter.com/rARk30BCwz
— PMO India (@PMOIndia) July 29, 2025
A strong military at the borders ensures a vibrant and secure democracy. pic.twitter.com/SBbCom3iQK
— PMO India (@PMOIndia) July 29, 2025
Operation Sindoor stands as clear evidence of the growing strength of India's armed forces over the past decade. pic.twitter.com/AYgAixTYsV
— PMO India (@PMOIndia) July 29, 2025
India is the land of Buddha, not Yuddha (war). We strive for prosperity and harmony, knowing that lasting peace comes through strength. pic.twitter.com/gSp2sMCc4L
— PMO India (@PMOIndia) July 29, 2025
India has made it clear that blood and water cannot flow together. pic.twitter.com/rD2A17BhDO
— PMO India (@PMOIndia) July 29, 2025
ऑपरेशन सिंदूर को लेकर विजयोत्सव का मतलब है- हमारी सेनाओं के शौर्य और सामर्थ्य की विजय गाथा का उत्सव! pic.twitter.com/cSq8u2yJYM
— Narendra Modi (@narendramodi) July 30, 2025
ऑपरेशन सिंदूर कितना सफल रहा है, इसका अंदाजा इसी बात से लगाया जा सकता है कि आज भी आतंक के आकाओं की नींद उड़ी हुई है। pic.twitter.com/HWvrz32LJG
— Narendra Modi (@narendramodi) July 30, 2025
हम गोली का जवाब गोले से देंगे! pic.twitter.com/0XYwJzyu2F
— Narendra Modi (@narendramodi) July 30, 2025
ऐसे अनेक उदाहरण हैं, जो बताते हैं कि कांग्रेस किस प्रकार अपने राजनीतिक मुद्दों के लिए पाकिस्तान पर निर्भर होती जा रही है… pic.twitter.com/g815wS55NI
— Narendra Modi (@narendramodi) July 30, 2025
पहलगाम हमले पर कांग्रेस ने पाकिस्तान को क्लीन चिट दे दी है। ये पहली बार नहीं है, जब देश में आतंकी घटनाओं को लेकर उसने ऐसा रवैया दिखाया है। pic.twitter.com/iZFk4jCHLF
— Narendra Modi (@narendramodi) July 30, 2025
कांग्रेस के पास राष्ट्रीय सुरक्षा को लेकर कभी कोई विजन नहीं रहा। आजादी के बाद उसने कुछ ऐसे फैसले लिए, जिनकी सजा देश को आज भी भुगतनी पड़ रही है। pic.twitter.com/EWR2V0OfDs
— Narendra Modi (@narendramodi) July 30, 2025