Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு தனது கருத்துகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்


ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டை முன்னிட்டு தனது கருத்துகளை கட்டுரை ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். சமுதாயத்திற்கு சேவை செய்வது மற்றும் தேச கட்டமைப்பில் பங்கேற்பது ஆகிய தொலைநோக்குப் பார்வையுடன் கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவுகளில் திரு மோடி தெரிவித்திருப்பதாவது:

சமூகத்திற்கு சேவை செய்வதையும் தேச கட்டமைப்பில் ஈடுபடுவதையும் நோக்கமாகக் கொண்டு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி தினத்தன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் உதயமானது. இந்த தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்வதற்காக நூறு ஆண்டுகளில் எண்ணிலடங்காத சேவகர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். இது குறித்த எனது கருத்துகளை வெளியிட்டுள்ளேன்.

https://www.narendramodi.in/100-years-of-service-to-the-nation

 

(Release ID: 2173987)

***

SS/BR/SH