பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும் கிரீஸ் நாட்டிற்க்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்தி மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே அதிகமான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பண்பாட்டுப் பரிவர்த்தனை ஆகியவற்றை அதிகரிக்கும் திறன் இந்த ஒப்பந்தத்திற்கு உள்ளது. மேலும் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டு மேம்பாடுகளுக்கு ஏற்றவாறு இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இரு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புக்கைளை வழங்கும் அதே சமயம் கூடுதலான தடையற்ற விமான போக்குவரத்து இணைப்புக்கு உகந்த சூழ்நிலையை இது அமைத்து தரும். விமானப் போக்குவரத்தில் கூடுதல் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இது வழி வகை செய்யும்.
இந்த விமானச் சேவைகள் உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு
தற்போதைய நிலையில் இந்தியாவுக்கும் கிரீசுக்கும் இடையே எவ்வித விமான சேவை ஒப்பந்தமும் இல்லை. இரு நாடுகளின் குழுக்களும் புதுதில்லியில் 2016 செப்டம்பர் 6,7 தேதிகளில் சந்தித்து விமான சேவைகள் ஒப்பந்தத்துக்கான வாசகங்களை இறுதி செய்தன. இந்த ஒப்பந்தம் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ள அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அதே சமயம் சிவில் விமானப் போக்குவரத்து துறையிள் நவீன மேம்பாடுகளையும் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே விமானப் போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது இந்த ஒப்பந்தம்.
*****