Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய இளைஞர்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்


தொடர் முயற்சியினாலும் அர்ப்பணிப்பினாலும் நமது திறமைகள் மேலும் மெருகேறுகின்றன என்றும், நமது இளைஞர்கள் இத்தகைய நற்பண்புகளைத் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டு நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ள பிரதமர், தொடர் முயற்சியும் தீவிரப் பயிற்சியுமே ஒருவரது திறமையை மேலும் மிளிரச் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று நாட்டின் இளைஞர்கள் இந்த உயரிய குணங்களைக் கடைப்பிடித்து சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை உயர்த்தி வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.

(Release ID: 2294135)

***

VJ/PD/SE/KR