Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்


புதுதில்லி, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் ஜூன் 29ம் தேதி வருகை தருகிறார்.
அங்கு மூப்பியல் தேசிய மையத்துக்கான அடிக்கல்லை அவர் நாட்டுகிறார். இது வயது முதிர்ந்தோருக்கு நேரும் அனைத்துவிதமான உடல்உபாதைகளுக்கும் தீர்வு வழங்கக் கூடிய பல் நோக்கு சிறப்பு மருத்துவ மையமாக திகழும். இது 200 படுக்கைகள் கொண்டதாக இருக்கும்.

அதே தினம் சஃப்தர் ஜங் மருத்துவமனையில் 555 படுக்கைகளுடன் அதி நவீன சிறப்பு மருத்துவப் பிரிவையும் (Super Speciality Block) 500 படுக்கைகள் கொண்ட புதிய அவசர சிகிச்சைப் பிரிவையும் (Emergency Block) பிரதமர் திறந்து வைக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனையில் 300 படுக்கைகள் கொண்ட ஓய்வில்லத்தையும் (PowerGrid Vishram Sadan) பிரதமர் திறந்து வைக்கிறார். இவற்றுடன் அன்ஸாரி நகர், எய்ம்ஸ் மற்றும் அவசர சிகிச்சை மையத்துக்கும் இடையில் சுரங்கவழி வாகனப் பாதையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

***