Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கண்ணியம், செயல்திறன் ஆகியவற்றால் மக்கள் இயக்கமாக உள்ள நிர்வாக அணுகுமுறையை எடுத்துரைக்கும் எழுத்தாளர் திரு சுஹேல் சேத்தின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


எழுத்தாளர் திரு சுஹேல் சேத் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவிக்காலம் குறித்து குறிப்பிடும் இக்கட்டுரை, அவர் வழக்கத்திற்கு மாறான வழியின் மூலம் கண்ணியம், செயல்திறன் ஆகியவற்றால் மக்கள் இயக்கமாக நிர்வாக அணுகுமுறையை மாற்றினார் என்று சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் திரு மோடி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதமர் என்றும், இந்தியாவுக்கு மிகவும் தேவையான செயல் நடவடிக்கையாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக்காலம் குறித்து இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள திரு சுஹேல் சேத், வழக்கத்திற்கு மாறான வழியின் மூலம் கண்ணியம், செயல்திறன் ஆகியவற்றால் மக்கள் இயக்கமாக நிர்வாக அணுகுமுறையை அவர் மாற்றினார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மோடி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதமர் என்றும், இந்தியாவுக்கு மிகவும் தேவையான செயல் நடவடிக்கையாளர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.”

***

(Release ID: 2271410)

SS/IR/RJ/KR