Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கும்பமேளாவின் சர்வதேச கருத்தரங்கில் மோடி உரை

கும்பமேளாவின் சர்வதேச கருத்தரங்கில் மோடி உரை


மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜெயின் அருகே உள்ள நினோரா பகுதியில் கும்பமேளா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற கும்பமேளாவின் ஒருங்கிணைந்த செய்தி என்ற சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தூர் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பிரதமரும், அதிபர் சிறிசேனாவும் இணைந்து இந்தூரிலிருந்து கருத்தரங்குக்கு வந்தனர்.

கும்பமேளாவுக்கு இடையே விச்சார் கும்பமேளா என்று அழைக்கப்படும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர், புதிய முயற்சியின் பிறப்பே இந்த கருத்தரங்கு என்று குறிப்பிட்டார். மேலும் அவர், பழங்காலத்தில் நடந்த சம்பவங்களின் நவீன பதிப்பே இந்த கருத்தரங்கம் என்று கூறினார். சமூகத்தில் ஒத்த கருத்துடைய தலைவர்கள் கும்பமேளா நடைபெறும் பகுதியில் ஒன்றுகூடி, சமூகத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து விரிவாக பேசிய பிரதமர், பிச்சைக்காரர்கள் என்பதன் அர்த்தம் என்னவெனில், எனக்கு நன்கொடை கொடுப்பவர்களுக்கும், கொடுக்காதவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பதுதான் என்றார். இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மனிதநேயம் மற்றும் அதன் மதிப்புகள் குறித்தும் பல்வேறு விளக்கங்களை பிரதமர் அளித்தார்.

இந்த கருத்தரங்கில் சிம்ம கும்பமேளாவின் பிரகடனத்தை உலகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அர்ப்பணித்தனர். இந்த பிரகடனத்தை அறிமுகப்படுத்தியது என்பது, இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுமைக்கும் புதிய உபதேசம் தொடங்கியுள்ளதை குறிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்த கும்பமேளா ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதில், காடுகளை பாதுகாப்பது, பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்பது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

***