Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிக்கிம் மாநிலம் நம்சியில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்


சிக்கிம் மாநிலம் நம்சியில் கட்டுமானத்திலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 – ம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது :

“சிக்கிம் மாநிலம் நம்சியில் கட்டுமானத்திலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286932&reg=3&lang=1

 

***

SS/IR/SM/SH