Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வரி வசூல் தொடர்பான உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவுக்கும் புருனே டாருசலாமுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் அமைச்சரவை ஒப்புதல்


வரி வசூல் தொடர்பான உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவுக்கும் புருனே டாருசலாமுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

விவரங்கள்:

  1. இந்த ஒப்பந்தம் சார்ந்த வரிகள் தொடர்பாக இரு நாடுகளின் உள்நாட்டு சட்ட அமலாக்கம் மற்றும் நிர்வாகத்திற்கு உதவுவதற்கு உரிய தகவல் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு இந்தியா மற்றும் புருனே டாருசலாம் அதிகாரிகளுக்கு இந்த ஒப்பந்தம் அதிகாரம் அளிக்கிறது.
  2. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் ரகசியமானவையாக கருதப்படவேண்டும். மதிப்பீடு, வசூல், அமலாக்கம், வழக்குத் தொடருதல், வரி தொடர்பான மேல்முறையீடுகளை இறுதி செய்தல், சம்பந்தப்பட்ட அதிகாரம் பெற்ற நபர்களுக்கு மட்டுமே இந்தத்  தகவல்களை வெளியிடவேண்டும். தகவலை அனுப்பும் நாட்டின் எழுத்துபூர்வமான முன் அனுமதியுடன்  இத்தகவல்கள் இதர நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ, அதிகாரிகளுக்கோ வழங்கப்படலாம்.
  • சில வகைப்படுத்தப்பட்ட வழக்குகள் தொடர்பான தகவல்களை இருநாடுகளுக்கும் இடையே தானாகவே பரிமாற்றம் செய்வதற்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது.
  1. இரு நாடுகளிடையே வரி வருவாய் கோரிக்கை தொடர்பான உதவிகளுக்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது.
  2. கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கும் அல்லது உடன்பாட்டின் கீழ் வரும் நடைமுறை இணக்கத்திற்கும் பரஸ்பர உடன்பாடு நடைமுறையை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
  3. இந்த உடன்பாடு இரு நாடுகளின் சட்ட தேவைகளையும், நடைமுறைகளையும் நிறைவு செய்த பின், அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

 

வரி விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் , புருனேவுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுவதை இந்த ஒப்பந்தம் விரிவுப்படுத்தும். இதனால் வரி ஏய்ப்பு மற்றும் வரித்தவிர்ப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படும். இருநாடுகளுக்கும் இடையே வரி வருவாய் கோரிக்கைகள் தொடர்பான வசூலுக்கும் இந்த ஒப்பந்தம் உதவும்.

  இந்த ஒப்பந்தம் சார்பாக எவ்வித நிதிச்செலவீனமும் இல்லை. ஒப்பந்தத்தின் 9-வது பிரிவின்படி அசாதாரணமான செலவினங்கள் 500 அமெரிக்க டாலர்-ஐத் தாண்டும் நிலையில் அதனை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதர  வரித்தகவல் பரிவர்த்தனை உடன்பாடுகளில் இந்தியா இத்தகைய பிரிவை கொண்டுள்ளது.

பின்னணி:

     1961 ஆம் ஆண்டின் வருமான வரிச்சட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய வருமான வரியை ஏய்ப்பது அல்லது தவிர்ப்பதை தடுப்பதற்கான தகவல் பரிமாற்றத்தை குறிப்பிட்ட நாட்டுடனோ அல்லது பகுதியுடனோ செய்து கொள்வதற்கு அந்தச் சட்டத்தின் 90-வது பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வரிகள் தொடர்பான தகவல் பரிமாற்ற உடன்பாடு பற்றிய பேச்சவார்த்தைகள் புருனேயில் 2017 ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இந்திய அரசுக்கும், புருனே டாருசலாமுக்கும் இடையே இந்த ஒப்பந்த வாசகம் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

——-