பி.எம்.இந்தியா
டாக்டர் பியரி சில்வெய்ன் ஃபிலியோசாட் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததோடு, சமஸ்கிருத ஆய்வுகளை, குறிப்பாக இலக்கியம், இலக்கணத் துறைகளில் பிரபலப்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முன்மாதிரியான முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“டாக்டர் பியர்-சில்வைன் ஃபிலியோசாட் சமஸ்கிருத ஆய்வுகளை, குறிப்பாக இலக்கியம் மற்றும் இலக்கணத் துறையில் பிரபலப்படுத்துவதற்கான அவரது முன்மாதிரியான முயற்சிகளுக்காக நினைவுகூரப்படுவார். அவர் இந்தியாவுடனும் இந்தியக் கலாச்சாரத்துடனும் ஆழமான தொடர்பு கொண்டிருந்தார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன”.
—
(Release ID:2089001)
TS/IR/KPG/KR
Dr. Pierre-Sylvain Filliozat will be remembered for his exemplary efforts to popularise Sanskrit studies, especially in the field of literature and grammar. He was deeply connected with India and Indian culture. Pained by his passing away. My thoughts are with his family and…
— Narendra Modi (@narendramodi) December 31, 2024