Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிம்லாவின் ஏழைகள் நல மகா சபையில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

சிம்லாவின் ஏழைகள் நல மகா சபையில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


பாரத் மாதா கி –ஜெ!

பாரத் மாதா கி –ஜெ!

இமாச்சலப்பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திரா அவர்களே, மக்கள் செல்வாக்கு மிகுந்த கடின உழைப்பு கொண்ட முதலமைச்சரும், எனது நண்பருமான திரு ஜெய் ராம் தாக்கூர் அவர்களே, பிஜேபியின் மாநில தலைவரும், எனது பழைய சகாவுமான திரு சுரேஷ் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இமாச்சலப்பிரதேசத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளே. இன்று எனது வாழ்க்கையில் சிறப்பான நாளாகும். இந்த சிறப்பு நாளில் தேவபூமிக்கு வணக்கம் செலுத்தும் கௌரவத்தை விட, பெரிய வாழ்த்து எதுவாக இருக்க முடியும். எங்களை ஆசிர்வதிக்க இவ்வளவு பெருந்திரளாக வந்திருப்பதற்காக நான் உங்களுக்கு மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன்.

 சற்று முன்னர் தான் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் பிரதமரின் விவசாய கௌரவிப்பு நிதியிலிருந்து தங்களின் கணக்குகளில் பணத்தை பெற்றனர். நாட்டின் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்குகளில் சிம்லாவிலிருந்து பரிவர்த்தனை செய்திருப்பதற்கு நான் பெருமை அடைகிறேன். இந்த விவசாயிகள் சிம்லாவை, இமாச்சலை, தேவபூமியை நினைப்பார்கள். அனைத்து விவசாய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துகொள்கிறேன்.

நண்பர்களே,

சிம்லாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும், இது இந்தியா முழுவதற்குமானது. ஆட்சியின் 8 ஆண்டு நிறைவின் போது, இந்த நிகழ்ச்சி நடைபெறுவது பற்றி நாங்கள் விவாதித்தோம்.இதற்கான ஆலோசனை இமாச்சலைச் சேர்ந்த நட்டா அவர்களிடமிருந்தும், ஜெய் ராம் அவர்களிடமிருந்தும் வந்தது. இரண்டு ஆலோசனைகளையும் நான் மிகவும் விரும்பினேன்.  இதனால் எவ்வித தயக்கமுமின்றி ஒப்புதல் அளித்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தை இமாச்சல் பெற்றுள்ளது. இந்த பூமியில் சில முக்கியமான தருணங்களை நான் செலவிட்டுள்ளேன். எனவே அரசின் 8 ஆண்டுகள் நிறைவுக்கான முக்கிய நிகழ்ச்சி எனது கர்மபூமியாக இருந்த சிம்லாவில் நடக்கட்டும் என்று நான் கூறினேன்.

நண்பர்களே,

 130 கோடி இந்தியர்களின் சேவகனாக பணியாற்ற நம்பிக்கையோடு வாய்ப்பையும், உரிமையையும் நீங்கள் எனக்கு  தந்திருக்கிறீர்கள். இன்று நான் சிலவற்றை செய்யமுடிகிறது என்றால், அவற்றை மோடி செய்ததாக நினைக்காதீர்கள். இவ்வாறு நடப்பது 130 கோடி மக்களின் கருணை, ஆசிகள் மற்றும் பலத்தால்தான். ஒரு குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதைத்தவிர, நான் என்னை பிரதமராக ஒருபோதும் கற்பனை கூட செய்ததில்லை. நான் ஒரு கோப்பில் கையெழுத்திடும் போது அதற்கு ஒரு பொறுப்பிருக்கிறது. அதன்படி, பிரதமராக நான் செயல்படவேண்டும். அந்த கோப்பு சென்றுவிட்டால் நான் ஒரு பிரதமர் அல்ல. 130 கோடி மக்களை கொண்ட குடும்பத்தின் ஓர் உறுப்பினராக மட்டும் நான் இருப்பேன். முதன்மை சேவகராக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

 நண்பர்களே,

வாக்குவங்கி அரசியல் பல பத்தாண்டுகளாக நமது நாட்டை ஆட்சி செய்தது வாக்கு வங்கியை உருவாக்கும் அரசியல் நாட்டிற்கு ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியது. நாங்கள் வாக்கு வங்கியை உருவாக்க பாடுபடவில்லை. புதிய இந்தியாவை கட்டமைக்க பாடுபடுகிறோம். எனவே ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற உணர்வுடன் செயல்படுகிறோம். அரசு திட்டங்களின் பயன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். எந்தஒரு ஏழையும் விடபடக்கூடாது என்ற அணுகுமுறையுடன் அரசு பணியாற்றுகிறது.

நண்பர்களே,

கடந்த 8 ஆண்டு முயற்சிகளின் விளைவுகளில்  நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். இந்தியர்களின் ஆற்றல் இருக்கும் வரை எந்தஒரு இலக்கும் அசாத்தியமானதல்ல. இந்தியா இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளின் மகத்தான தீர்மானங்களை எதார்த்தமாக புதிய பொருளாதாரத்திற்கான புதிய அடிப்படை கட்டமைப்பை நாடு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.  உலகின் சிறந்த டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதில் இன்று நமது கவனம் குவிந்திருக்கிறது.  ஏழை தாய்மாரின் மகனும், மகளும் மருத்துவராகும் கனவை நனவாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. கடந்த காலத்தில் கல்வி என்பது ஆங்கிலத்தில் இருந்ததால் ஏழைகளின் மருத்துவக்கனவு நிறைவேறவில்லை. இப்போது ஆங்கிலத்தின் அடிமையாக இல்லாமல், தாய்மொழியிலேயே மருத்துவக்கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் வழங்க நாங்கள் முடிவு செய்திருப்பதால் பரமஏழைகளின் குழந்தைகளும் மருத்துவராக முடியும்.

 சகோதர, சகோதரிகளே,

இன்று இந்த நிகழ்ச்சியில் நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள மக்கள் பங்கேற்கிறார்கள். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் இன்று சிம்லாவுடன் இணைந்திருக்கிறார்கள். உங்களின் ஆசிர்வாதங்கள் தொடர்வதால் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த உணர்வுடன் எனது இதயத்தில் இருந்து உங்களுக்கு மீண்டும் ஒருமுறை  நான் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடன் இணைந்து கூறுங்கள் :

பாரத் மாதா கி –ஜெ!

பாரத் மாதா கி –ஜெ!

பாரத் மாதா கி –ஜெ!

மிக்க நன்றி!

                                                                                ***************