பி.எம்.இந்தியா
நாட்டை வடிவமைப்பதில் இந்திய இளைஞர்களின் நீடித்த பங்களிப்பை சுட்டிக்காட்டும் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நாட்டை வரையறுக்கும் தருணங்களை இந்திய இளைஞர்கள் எப்போதும் வடிவமைப்பதாக இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. இது வளர்ச்சியடைந்த இந்தியா இளந்தலைவர்கள் உரையாடல் என்ற இயக்கமாக, வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் முன்னோடியாகவும், நாட்டின் சவால்களை எதிர்கொள்ளவும் அவர்களுடைய நோக்கங்களை வழிநடத்தவும் தலைமை தாங்குமாறு இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
இக்கட்டுரையை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்த சிந்தனையைத் தூண்டும் கட்டுரையில் நாட்டை வரையறைக்கும் தருணங்களை இந்திய இளைஞர்கள் எப்போதும் வடிவமைப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சுட்டிக்காட்டியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா இளந்தலைவர்கள் உரையாடல் என்ற இயக்கமாக வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் முன்னோடியாகவும், நாட்டின் சவால்களை எதிர்கொள்ளவும் அவர்களுடைய நோக்கங்களை வழிநடத்தவும் தலைமை தாங்குமாறு இந்திய இளைஞர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுக்கிறார்”.
***
(Release ID: 2212379)
TV/IR/KPG/PD
In this thought-provoking article, Union Minister Dr. @mansukhmandviya underscores that India’s youth have always shaped the nation’s defining moments.
— PMO India (@PMOIndia) January 8, 2026
The Minister describes the Viksit Bharat Young Leaders Dialogue as a movement that calls upon young Indians to lead from the… https://t.co/OGN7RtrhLH