பி.எம்.இந்தியா
ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங்கை சந்தித்ததில் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்திய-ஆஸ்திரேலிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்தும், விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்த சந்திப்புப் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியதாவது:
“ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்திய-ஆஸ்திரேலிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்தும், விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து பாடுபடும்.
@SenatorWong”
***
(Release ID: 2265613)
TV/RB/RJ
Happy to receive Senator Penny Wong, Minister for Foreign Affairs of Australia. We discussed the growing India-Australia Comprehensive Strategic Partnership in areas such as defence, trade, technology and ensuring supply chain resilience. India and Australia will continue to work… pic.twitter.com/YzNOwCx3YU
— Narendra Modi (@narendramodi) May 26, 2026