Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவா மாநில தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவா மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு இன்று தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கோவா அதன் துடிப்பான கலாச்சாரம், வளமான பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் அன்பான மக்களைக் கொண்ட மாநிலம் எனப் பரவலாக அறியப்படுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

கோவாவின் முன்னேற்றத்திற்காகவும் அடையாளத்திற்காகவும் அயராது உழைத்த அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்வதற்கு இந்த நாள் ஒரு வாய்ப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கோவா தொடர்ந்து செழித்து, வளர்ந்த பாரதத்தைக் கட்டமைப்பதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரு மோடி கோவாவைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் வேண்டிக்கொண்டுள்ளார்.

பிரதமர் எக்ஸ் சமூக ஊடக  தளத்தில் கூறியிருப்பதாவது;

கோவா மாநில தினத்தின் சிறப்பான சந்தர்ப்பத்தில் கோவா மக்களுக்கு வாழ்த்துகள். கோவாவின் துடிப்பான கலாச்சாரம், வளமான பாரம்பரியம், இயற்கை அழகு, அன்பான மக்கள் எனப் பரவலாக அறியப்பட்டவை. அதன் முன்னேற்றத்திற்காகவும் அடையாளத்திற்காகவும் அயராது உழைத்த அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்வதற்கும் இந்த நாள் ஒரு வாய்ப்பாகும். கோவா தொடர்ந்து செழித்து, வளமான இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றட்டும். கோவா மாநிலத்தின் அனைத்து மக்களும் நல்ல உடல்நலமும் செழிப்பும் பெற பிரார்த்திக்கிறேன்.”

***

(Release ID: 2266896)

TV/PKV/RJ