Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புரட்சிகரமிக்க நல்ல அரசு நடவடிக்கைகள் மூலம் அறிவியல் ரீதியாக வறுமையை நீக்குவது பற்றி திரு பெர்ஜிஸ் தேசாய் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


எழுத்தாளர் திரு பெர்ஜிஸ் தேசாய் எழுதியுள்ள கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் திரு மோடி அறிவியல் ரீதியாக வறுமையை நீக்குவதற்கு புரட்சிகரமிக்க, திறன்மிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்குப் பின்வரும் பிரதமர்கள் அவரை பின்பற்ற முயற்சிப்பார்கள் என்பதால், அடுத்த பத்தாண்டுகளில் திரு நரேந்திர மோடி முன்மாதிரியாக திகழ்வார் என்று அது சுட்டிக்காட்டுகிறது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“அறிவியல் ரீதியாக வறுமையை நீக்குவதற்கு புரட்சிகரமிக்க, திறன்மிக்க அரசு நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டதாக இக்கட்டுரையில் திரு பெர்ஜிஸ் எழுதியுள்ளார். அவருக்குப் பின்வரும் பிரதமர்கள் அவரை பின்பற்ற முயற்சிப்பார்கள் என்பதால், அடுத்த பத்தாண்டுகளில் நரேந்திர மோடி முன்மாதிரியாக திகழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.”    

***

(Release ID: 2271424)

SS/IR/RJ/KR