பி.எம்.இந்தியா
புனித ரதயாத்திரை நிகழ்ச்சியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரதயாத்திரை இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தின் ஒளிமயமான வெளிப்பாடு என்றும் பணிவு, கூட்டுப்பங்களிப்பு, தன்னலமற்ற சேவை என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
புனித ரதயாத்திரை நிகழ்ச்சியையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். இது இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தின் ஒளிமயமான வெளிப்பாடாகும். ரதயாத்திரையுடன் தொடர்புடைய பாரம்பரியங்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவை பணிவு, கூட்டுப்பங்களிப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மகாபிரபு ஜகந்நாதர், அனைவரும் சிறந்த ஆரோக்கியம், மகிழ்சி, வளமை ஆகியவற்றுடன் வாழ ஆசீர்வதிக்கட்டும். அவர் நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் வலிமையளித்து, நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும்.
ஜெய் ஜகந்நாத்!
***
(Release ID 2285224)
SS/IR/KPG/RJ
Greetings to everyone on the sacred occasion of Rath Yatra. This is a radiant expression of India’s timeless spiritual and cultural heritage. The traditions associated with the Rath Yatra have inspired generations across India and the world. They embody humility, collective…
— Narendra Modi (@narendramodi) July 16, 2026
ପବିତ୍ର ରଥଯାତ୍ରା ଅବସରରେ ସମସ୍ତଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା । ଏହା ଭାରତର କାଳଜୟୀ ଆଧ୍ୟାତ୍ମିକ ଏବଂ ସାଂସ୍କୃତିକ ଐତିହ୍ୟର ଏକ ଅନନ୍ୟ ଅଭିବ୍ୟକ୍ତି । ରଥଯାତ୍ରା ସହ ଜଡିତ ପରମ୍ପରା ଭାରତ ଏବଂ ବିଶ୍ୱର ଅନେକ ପିଢ଼ିକୁ ପ୍ରେରଣା ଦେଇଛି । ଏହା ବିନମ୍ରତା, ସାମୂହିକ ଅଂଶଗ୍ରହଣ ଏବଂ ନିଃସ୍ୱାର୍ଥପର ସେବାକୁ ପ୍ରତିଫଳିତ କରେ ।
— Narendra Modi (@narendramodi) July 16, 2026
ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ…