Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜென்மாஷ்டமி பண்டிகையையொட்டி முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


ஜென்மாஷ்டமி நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நீதிமொழி ஒன்றைப் பகிர்ந்துள்ள பிரதமர், பகவான் கிருஷ்ணர் மீதான தமது ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“வாசுதேவரின் புதல்வரும், கம்சன் மற்றும் சாணூரனை அழித்தவரும், அன்னை தேவகிக்கு அளவிலா பேரானந்தத்தை அளிப்பவரும், அகில உலகின் நாயகனும், தெய்வீகத் தன்மையின் வடிவமுமான பகவான் கிருஷ்ணரை வணங்குகிறேன்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306634&reg=3&lang=1

***

SS/BR/SM