பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா மற்றும் கியூபா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்தேதியிட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017, டிசம்பர் 6ம் தேதி புதுதில்லியில் கையொப்பமானது.
கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியது:
மருத்துவர்கள், அதிகாரிகள், இதர சுகாதார நிபுணர்கள் மற்றும் நிபுணத்துவம் கொண்டவர்கள் பரிவர்த்தனை மற்றும் பயிற்சி;
ஒத்துழைப்புக்கான விவரங்களை மேலும் விவரிக்கவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவும் கூட்டுப் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும்.