பி.எம்.இந்தியா
இந்தியாவை இணைக்கவும்,உந்தி செல்லவும், பாதுகாக்கவும்
உலகளாவிய அகன்ற அலைவரிசை இணைப்புகள் வினாடிக்கு 50 மெகாபைட்கள் வேகத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வழங்குதல்
அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் வினாடிக்கு 1 கிகாபைட் வேகத்தில் அகன்ற அலைவரிசை இணைப்பு வழங்குதல்
இதுவரை இணைய சேவை கிடைக்க பெறாத அனைத்துப் பகுதிகளிலும் இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்தல்
டிஜிட்டல் தொலைதொடர்பு துறையில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்தல்
செப்டம்பர் 26, 2018
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய டிஜிட்டல் தொலை தொடர்புக் கொள்கை – 2018 மற்றும் தொலைத் தொடர்பு ஆணையத்தை “டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையம்” என்று பெயர் மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விளைவுகள்:
இந்தியா டிஜிட்டல் அதிகாரம் பெற்ற பொருளாதாரம் மற்றும் சமுதாயம் மிகுந்த நாடாக மாறுவதற்கு உதவும் வகையில், குடிமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தேவைகளையும் பூர்த்தி செய்ய தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்பு கொள்கை 2018-ல் வகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் எந்த பகுதியிலும், வளைந்து கொடுக்கக் கூடிய மற்றும் கட்டுப்படியாகக் கூடிய விதத்தில் டிஜிட்டல் தொலைத் தொடர்பு கட்டமைப்பு வசதிகளையும், சேவைகளையும் ஏற்படுத்துவதன் மூலம் மேற்கூறியவற்றை நிறைவேற்ற வகை செய்யப்பட்டுள்ளது.
“நுகர்வோர் நலன் சார்ந்த” மற்றும் “பயன்பாடு சார்ந்த” தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்புக் கொள்கை 2018, 5ஜி, ஐ.ஓ.டி., எம்.2 எம். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவின் தொலைத் தொடர்த் துறையை நிர்வகிக்க தேவையான புதிய கருத்துக்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வகை செய்யும்.
நோக்கங்கள்:
இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் வருமாறு:
இந்த நோக்கங்கள் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
பலன்கள்:
செயல் திட்டம்:
இந்த கொள்கை வலியுறுத்தும் அம்சங்கள்:-
பின்னணி:
தற்போதைய உலகம், 5ஜி, ஐ.ஓ.டி மற்றும் எம்.2.எம். போன்ற அதிநவீன தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்த காலகட்டத்தில், இந்திய தொலைத் தொடர்புத் துறையில், புதிதாக தோன்றும் வாய்ப்புகளை எதிர்கொண்டு டிஜிட்டல் இந்தியாவுக்கான முக்கிய தூணை உருவாக்கக் கூடிய, நுகர்வோர் நலன் சார்ந்த மற்றும் பயன்பாடு சார்ந்த கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. தற்போது கிடைக்கும் தொலைத் தொடர்பு சேவைகளை மட்டுமின்றி தொலைத் தொடர்பு அடிப்படையிலான பல்வேறு சேவைகளையும் விரிவுபடுத்த வேண்டியதும் அவசியமாகும்.
இந்தியாவின் டிஜிட்டல் தொலைத் தொடர்புத் துறையின் நவீன தேவைகளை நிறைவேற்றும் வகையில், தற்போதுள்ள தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை 2012-க்கு பதிலாக, புதிய தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்புக் கொள்கை 2018 உருவாக்கப்பட்டுள்ளது.