பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கட்ச், ரான்னில் உள்ள தோர்டோ டென்ட் நகரத்துக்கு வருகை தந்து, மூன்று நாட்கள் நடைபெற உள்ள காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். டெல்லிக்கு வெளியே இந்த மாநாடு நடத்தப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த ஆண்டு, இந்த மாநாடு கவுகாத்தியில் நடைபெற்றது.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். “தேசத்தின் சேவையில் இந்திய காவல்துறை” என்ற இணையதளத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் உள்துறை அமைச்சர் மற்றும் இதர பிரதிநிதிகளோடு டென்ட் நகரத்திலிருந்து சிறு தொலைவில் உள்ள வெள்ளை ரான் பகுதிக்கு சென்றார். அங்கே எல்லைப் பாதுகாப்பு படை நடத்திய ஒட்டக சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டார். வெள்ளை ரான் பகுதியில் சூரியன் அஸ்தமிப்பதை பார்வையிட்ட பிரதமர், பின்னர் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உள்துறை துணை அமைச்சர்கள் திரு கிரேன் ரிஜ்ஜிஜ்ஜு மற்றும் திரு ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.
Delighted to be in the picturesque & beautiful Kutch, a district that has emerged as one of India's fastest growing & vibrant districts.
— Narendra Modi (@narendramodi) December 18, 2015