பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல்சாசன (பழங்குடியினர்) ஆணை (திருத்த) மசோதா, 2018 என்ற பெயரிலான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்காக அரசியல்சாசன (பழங்குடியினர்) ஆணை 1950-ல் சில திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
அருணாச்சலப்பிரதேச பழங்குடியினர் பட்டியலில் கீழ்க்காணும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன:
திட்டமிடப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படைகளாவன:
இந்த மசோதா, சட்டமாக நிறைவேற்றப்பட்டபிறகு, அருணாச்சலப்பிரதேச பழங்குடியினர் குறித்த திருத்தியமைக்கப்பட்ட புதிய பட்டியலில் உள்ள சமூகத்தின் உறுப்பினர்களும், பழங்குடியினருக்காக அரசு ஏற்கனவே செயல்படுத்திவரும் திட்டங்களின் பயன்களைப் பெற முடியும். இதன்படி, உயர்கல்விக்கான ஊக்கத்தொகை, தேசிய வெளிநாடுவாழ் ஊக்கத்தொகை, தேசிய ஊக்கத்தொகை, உயர்வகுப்பு கல்வி, தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திலிருந்து கிடைக்கும் சலுகை கடன்கள், பழங்குடியின சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான விடுதிகள் போன்ற திட்டங்களின் பயன்களைப் பெற முடியும். அதோடு, அரசு பணியிலும், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசு கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டைப் பெற முடியும்.
****