Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாம் மாநிலம் குவஹாத்தியில் ₹19,480 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

அசாம் மாநிலம் குவஹாத்தியில் ₹19,480 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்


அசாம் மாநிலம் குவஹாத்தியில் சுமார் ₹19,480 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். குவஹாத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அசாம் மாநிலத்தை எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் முதல், அசாமுக்கு பயணிக்கும் மக்களின் வசதியை மேம்படுத்தும் பணிகள் வரை ஏராளமான திட்டங்கள் மாநிலத்திற்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ்  நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார்  ₹18,000 கோடி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக திரு மோடி தெரிவித்தார். இதுவரை கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஏறத்தாழ ₹4.25 லட்சம் கோடி அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இன்று, கவுரவிப்பு நிதித் திட்டம் நாட்டின் சிறு விவசாயிகளுக்கு சமூகப் பாதுகாப்புக்கான ஒரு ஊடகமாக மாறியுள்ளதுஎன்று திரு மோடி குறிப்பிட்டார். தற்போதைய அரசிற்கு, விவசாயிகளின் நலனை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று பிரதமர் வலியுறுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில், விவசாயிகள் ₹20 லட்சம் கோடிக்கு மேல் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில், தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகளைச் சுற்றி ஒரு வலுவான பாதுகாப்புக் கவசத்தை பின்னியுள்ளது என்று பிரதமர் கூறினார். குறைந்தபட்ச ஆதரவுத் திட்டம், மலிவு விலை கடன்கள், பயிர் காப்பீடு போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு ஒரு பெரிய ஆதரவு அமைப்பாக மாறியுள்ளன என்பதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். சர்வதேச நெருக்கடிகளின் தாக்கம் விவசாயத்தையும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசு கவனமாக உள்ளது என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த பத்தாண்டுகளில், தற்போதைய அரசு தன்னிறைவை நோக்கி ஒரு மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். வெளிப்புற நெருக்கடிகளிலிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க சுயசார்பு ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் புதிய எதிர்காலமானஅஷ்டலட்சுமிக்குஅசாம் இன்று ஒரு முன்மாதிரியாக உருவெடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். அசாமின் முன்னேற்றம் முழு வடகிழக்குப் பகுதிக்கும் புதிய உத்வேகத்தை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். “நாட்டில் ஒரு முன்மாதிரியான மாநிலமாக அசாம் உருவெடுக்க நாம் அனைவரும் ஒரு வளர்ச்சியடைந்த அசாமுக்காக ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்என்று ஒவ்வொரு இளைஞரையும் ஒவ்வொரு குடும்பத்தையும் திரு மோடி வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239874&reg=3&lang=1

***

TV/RB/RJ