பி.எம்.இந்தியா
இரண்டாம் நிலை ஆதாரங்களில் இருந்து அத்தியாவசிய கனிமங்களை பிரித்தெடுத்து உற்பத்தி செய்வதற்காக நாட்டின் மறுசுழற்சி திறனை ஊக்குவிக்க 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய அத்தியாவசிய கனிமங்கள் இயக்கத்தின் ஒரு பகுதியான இந்தத் திட்டம், முக்கியமான கனிமங்களில் உள்நாட்டு திறனையும் விநியோகச் சங்கிலி நெகிழ்தன்மையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலநிலை நிதியாண்டு 2025-26 முதல் நிதியாண்டு 2030-31 வரையிலான ஆறு ஆண்டுகளாகும். இந்தத் திட்டம், அத்தியாவசிய கனிமங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபடும் மறுசுழற்சி மதிப்புச் சங்கிலிக்கு ஊக்கத்தொகையை வழங்கும்.
திட்டத்திற்கான ஊக்கத்தொகைகள் ஆண்டுக்கு குறைந்தது 270 கிலோ டன் மறுசுழற்சி திறனை வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 40 கிலோ டன் முக்கிய கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும். இந்தத் திட்டம் சுமார் 8,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் என்றும், 70,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163454
***
(Release ID: 2163454)
SS/BR/KR
This decision by the Union Cabinet pertaining to an incentive scheme to promote critical mineral recycling will boost capacities to recycle battery waste and e-waste, promote investment and encourage job creation.https://t.co/6deRyQekLM
— Narendra Modi (@narendramodi) September 3, 2025