Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்; மான்செஸ்டரில் நடைபெற்ற தீவீரவாத தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்துடன் இந்தியா துணை நிற்கும் என்று உறுதி


இங்கிலாந்து பிரதமர் திருமதி தெரேசா மே அவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். மான்செஸ்டரில் நடைபெற்ற தீவீரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்துடன் இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

“மான்செஸ்டரில் நடைபெற்ற தீவீரவாத தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்துடன் இந்தியா துணை நிற்கும் என்பதை தெரிவிக்க பிரதமர் திருமதி தெரேசா அவர்களை தொலைபேசியில் அழைத்து பேசினேன்” என்று பிரதமர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.