Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையே மாற்றியமைக்கப்பட்ட விமானச் சேவைகள் ஒப்பந்தக் கையெழுத்திடலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையே மாற்றியமைக்கப்பட்ட விமானச் சேவைகள் ஒப்பந்தக் கையெழுத்திடலுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய ஒப்பந்தம் 1978 ஜனவரி 31 –ந் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் புதிய வடிவம் தற்போதைய சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் நெறிகளுக்கு ஏற்பவும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டும் வரையப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாற்றியமைக்கப்பட்ட உடன்பாடு இந்தியா, நைஜீரியா இடையிலான சிவில் விமான போக்குவரத்து தொடர்புகளில் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. இந்த உடன்பாடு இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், முதலீடுகள், சுற்றலா, பண்பாட்டு பரிவர்த்தனை ஆகியவற்றை வெகுவாக உயர்த்தும் திறன் கொண்டது.

 

இந்த விமானச் சேவைகள் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

  1. இரு நாடுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விமான நிறுவனங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

 

  1. ஒரு நாட்டின் நிர்ணயிக்கப்பட்ட விமான நிறுவனம் அடுத்த நாட்டின் பகுதியில் விற்பனை மற்றும் சேவை மேம்பாட்டுக்கான அலுவலகங்களை அமைத்துக் கொள்ளும் உரிமை பெறுகிறது.
  2. இரு நாடுகளும் முற்றிலும் சரக்குகள் கொண்ட விமானச் சேவைகளை அடுத்த நாட்டில் எந்த எண்ணிக்கையில் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். முழுமையான மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது போக்குவரத்து உரிமைகள் சுதந்திரத்தின் கீழ் எந்தவகை விமானத்தின் மூலமும் அதனை நடத்தலாம்.

 

  1. நிர்ணயிக்கப்பட்ட விமான நிறுவனம் தங்களது சேவைகள் குறித்த கட்டணங்களைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். வர்த்தக அம்சங்களைக் கருத்தில் கொண்டு நியாயமான விலைகள் அடிப்படையில் இதனை நிர்ணயிக்க வேண்டும்.
  2. நிர்ணயிக்கப்பட்ட விமான நிறுவனம் அது தரப்பு நிர்ணயித்த வேறு விமான நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு விற்பனை ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.  பிற விமான நிறுவனங்களுடனும் இதே போன்ற ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.
  3. புதிய பிரிவுகளின்படி ஒவ்வொரு தரப்பும் வாரத்திற்கு அதிகபட்சமாக ஏழு முறை விமான சேவைகளை நடத்தலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட வழித்தட பட்டியலின்படி இதனை அமைத்துக் கொள்ள வேண்டும்.
  4. இதுதவிர இந்தப் புதிய விமானச் சேவை ஒப்பந்தம் கீழ்க்கண்டவை தொடர்பான பிரிவுகளைக் கொண்டுள்ளது. செயல்நிலை அனுமதியை திரும்பப் பெறுவது அல்லது தற்காலிகமாக நிறுத்துவது, ஒப்புக் கொள்ளப்பட்ட சேவைகளை நடத்துவது சார்ந்த கொள்கைகள், வழித்தட நெகிழ்ச்சித்தன்மை, வர்த்தக வாய்ப்புக்கள், விமான போக்குவரத்தப் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் தொடர்பான பிரிவுகள். இவையனைத்தும் இந்திய விமானச் சேவைகள் ஒப்பந்த மாதிரியில் அமைக்கப்பட்டிருக்கும்.

****