Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – ஜாம்பியா இடையே நீதித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – ஜாம்பியா இடையே நீதித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சமீப ஆண்டுகளில், இந்தியா – ஜாம்பியா இடையேயான சமூக, கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகள் சரியான திசையில் மேம்பட்டு வருகிறது. எனவே, நீதித்துறையில் இருநாடுகள் இடையே செய்து கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம், நல்லுறவுகளை மேலும் அதிகரிப்பதுடன், நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகளில் புதிய பரிமாணத்தையும் ஏற்படுத்தும்.