பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் ஜூனியரை வரவேற்றார். ஜூன் 2023 இல் வாஷிங்டன்னிற்கு பிரதமர் திரு மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் அடித்தள சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றம் குறித்து தலைவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலை அடிப்படையாகக் கொண்ட நமது பன்முக உலகளாவிய உத்தேச திட்டத்தின் அனைத்து பரிமாணங்களிலும் உத்தி சார்ந்த இந்திய-அமெரிக்க கூட்டாண்மையை மாற்றும் பணியைத் தொடருமாறு தங்கள் அரசுகளுக்கு தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்புகள் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகள், நமது நாடுகள் அனுபவிக்கும் வெற்றிக்கு முக்கியமானவை என்றும், இந்த மதிப்புகள் நம் உறவை வலுப்படுத்துகின்றன என்றும் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
ஒரு மன்றமாக ஜி20 எவ்வாறு முக்கியமான முடிவுகளை வழங்குகிறது என்பதை மேலும் நிரூபித்ததற்காக இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தை அதிபர் திரு பைடன் பாராட்டினார். புதுதில்லியில் நடைபெறும் ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் முடிவுகள் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்துதல், பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட நமது மிகப்பெரிய பொதுவான சவால்களை எதிர்கொள்ள உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைகளைச் சுற்றி உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் பகிரப்பட்ட இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் என்று தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நெகிழ்வான இந்தோ-பசிபிக்கை ஆதரிப்பதில் குவாட்-இன் முக்கியத்துவத்தை பிரதமர் திரு மோடியும், அதிபர் திரு பைடனும் மீண்டும் உறுதிப்படுத்தினர். 2024-ஆம் ஆண்டில் இந்தியா நடத்தும் அடுத்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு அதிபர் திரு பைடனை வரவேற்பதில் பிரதமர் திரு மோடி தமது ஆவலை வெளிப்படுத்தினார். ஜூன் 2023இல் ஐ.பி.ஓ.ஐ-இல் சேர்வதற்கான அமெரிக்காவின் முடிவுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், வர்த்தக இணைப்பு மற்றும் கடல் போக்குவரத்துக்கான இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சிக்கு கூட்டு தலைமை தாங்குவதற்கான அமெரிக்காவின் முடிவை இந்தியா வரவேற்றது.
உலகளாவிய நிர்வாகம் மிகவும் உள்ளடக்கியதாகவும், பிரதிநிதித்துவமாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்ட அதிபர் திரு பைடன், இந்தியாவை நிரந்தர உறுப்பினராகக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தப்பட்ட தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், 2028-29 ஆம் ஆண்டில் யு.என்.எஸ்.சி-இல் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியிடுவதை மீண்டும் வரவேற்றார். ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்புரிமைகளை விரிவுபடுத்துவதன் மூலம், சமகால யதார்த்தங்களை சிறப்பாக பிரதிபலிக்கும் வகையிலும், விரிவான ஐ.நா சீர்திருத்த உத்தேசத் திட்டத்திற்கு உறுதி ஏற்கும் வகையில் பலதரப்பு அமைப்பை வலுப்படுத்தவும், சீர்திருத்தவும் வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
பிரதமர் திரு மோடியும், அதிபர் திரு பைடனும் நமது உத்தி சார்ந்த கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் வரையறுக்கப்பட்ட பங்கை மீண்டும் உறுதிப்படுத்தினர், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வெளிப்படையான, அணுகக்கூடிய, பாதுகாப்பான மற்றும் நெகிழ்திறன் கொண்ட தொழில்நுட்ப சூழலியல் மற்றும் மதிப்பு சங்கிலிகளை உருவாக்குவதற்கான அவசியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப (ஐ.சி.இ.டி) முன்முயற்சி, நமது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துகிறது. 2024-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தலைமையிலான அடுத்த வருடாந்திர ஐ.சி.இ.டி மதிப்பாய்வை நோக்கி வேகமாக முன்னேறுவதற்காக, அமெரிக்காவும், இந்தியாவும் செப்டம்பர் 2023 இல் ஐ.சி.இ.டியின் இடைக்கால மதிப்பாய்வை மேற்கொள்ள உத்தேசித்துள்ளன.
நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் -3இன் வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம் மற்றும் இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா -எல் 1 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக பிரதமர் திரு மோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அதிபர் திரு பைடன் வாழ்த்து தெரிவித்தார். விண்வெளி ஒத்துழைப்பின் அனைத்து துறைகளிலும் புதிய எல்லைகளை அடைவதற்கான பாதையை அமைத்த தலைவர்கள், வணிக விண்வெளி ஒத்துழைப்புக்கான பணிக்குழுவை அமைப்பதற்கான முயற்சிகளை வரவேற்றனர். விண்வெளி ஆராய்ச்சியில் நமது கூட்டாண்மையை ஆழப்படுத்த உறுதிபூண்டுள்ள இஸ்ரோ மற்றும் தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாசா, 2024-ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்வதற்கான வழிமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி குறித்த விவாதங்களைத் தொடங்கியுள்ளன.
நெகிழ்வான உலகளாவிய குறைக்கடத்தி விநியோக சங்கிலிகளை உருவாக்குவதற்கான தங்கள் ஆதரவை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர், இந்த வகையில் மைக்ரோசிப் டெக்னாலஜி இன்க், இந்தியாவில் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இருப்பை விரிவுபடுத்த சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதற்கான பல ஆண்டு முன்முயற்சியைக் குறிப்பிட்டனர். அமெரிக்க நிறுவனங்களான மைக்ரான், லேம் ரிசர்ச் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகியவற்றால் ஜூன் 2023 இல் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
பாதுகாப்பான மற்றும் நம்பகமான தொலைத்தொடர்புகள், நெகிழ்வான விநியோகச் சங்கிலிகள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கம் குறித்த பார்வையைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு இடையிலான பொது-தனியார் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான முதல் படியாக பாரத் 6 ஜி அலையன்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு தொழில் தீர்வுகளுக்கான கூட்டணியால் இயக்கப்படும் நெக்ஸ்ட் ஜி அலையன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதை வரவேற்றனர்.
சர்வதேச குவாண்டம் பரிமாற்ற வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான தளமான குவாண்டம் எக்ஸ்சேஞ்ச் மூலம், இருதரப்பு மற்றும் குவாண்டம் துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியது; குவாண்டம் பொருளாதார மேம்பாட்டுக் கூட்டமைப்பின் உறுப்பினராக கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் எஸ்.என்.போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் பங்கேற்பதை அவர் வரவேற்றார். மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), சிகாகோ குவாண்டம் எக்ஸ்சேஞ்சில் சர்வதேச பங்குதாரராக இணைந்தது, அங்கீகரிக்கப்பட்டது.
உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி உற்பத்தி கண்டுபிடிப்புகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை செயல்படுத்த அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (என்.எஸ்.எஃப்) மற்றும் இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை இடையே ஒரு செயலாக்க ஒப்பந்தம் கையெழுத்தானதை தலைவர்கள் பாராட்டினர்.
***
ANU/SM/RB/DL
Prime Minister @narendramodi and @POTUS @JoeBiden are holding talks at 7, Lok Kalyan Marg in Delhi.
— PMO India (@PMOIndia) September 8, 2023
Their discussions include a wide range of issues and will further deepen the bond between India and USA. pic.twitter.com/PWGBOZIwNT
Happy to have welcomed @POTUS @JoeBiden to 7, Lok Kalyan Marg. Our meeting was very productive. We were able to discuss numerous topics which will further economic and people-to-people linkages between India and USA. The friendship between our nations will continue to play a… pic.twitter.com/Yg1tz9kGwQ
— Narendra Modi (@narendramodi) September 8, 2023