பி.எம்.இந்தியா
இந்தியா மற்றும் போர்த்துக்கல் இடையே ஜனவரி 6, 2017 அன்று புது தில்லியில் கையெழுத்திடப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இரு நாடுகளின் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் நிலையான ஒத்துழைப்பு உருவாவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
****