Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இன்று புதிதாக பதவியேற்ற உ.பி. அரசுக்கு பிரதமர் வாழ்த்து

இன்று புதிதாக பதவியேற்ற உ.பி. அரசுக்கு பிரதமர் வாழ்த்து


உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய அரசு அமைக்க இன்று பதவி ஏற்றுக் கொண்ட திரு. யோகி ஆதித்யாநாத், திரு. கேஷவ் பிரசாத் மவுர்யா, திரு. தினேஷ் சர்மா மற்றும் பிற அமைச்சர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். புதிய அரசு மீது கடும் நம்பிக்கையை தெரிவித்த பிரதமர், புதிய அணியினரால் உத்தரபிரதேசத்தின் வளர்ச்சியில் சாதனை படைக்கப்படும் என்றும், உ.பி. வளர்ச்சியடையும் போது இந்தியாவும் வளர்ச்சியடையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

”யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும், கேஷவ் பிரசாத் மவுர்யா அவர்களுக்கும், தினேஷ் சர்மா அவர்களுக்கும் இன்று பதவி ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள். உ.பி.க்கு சேவையாற்ற வாழ்த்துகள்.

புதிய அணியினரால் உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதில் அவர்கள் எந்த முயற்சியையும் தவறவிடமாட்டார்கள் என்ற தீவிரமான நம்பிக்கை எனக்கு உள்ளது. வளர்ச்சியில் சாதனை படைக்கப்படும்.

நமது ஒரே லட்சியம் மற்றும் நோக்கம் வளர்ச்சி. உத்தர பிரதேசம் வளர்ச்சியடையும் போது இந்தியாவும் வளர்ச்சியடையும். உத்தர பிரதேச இளைஞர்களுக்கு சேவைபுரிந்து அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த விரும்புகிறோம்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.