Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இ-என்.ஏ.எம். (தேசிய வேளாண் சந்தை) அறிமுக விழாவில் விவசாயிகளிடையே பிரதமர் உரை

இ-என்.ஏ.எம். (தேசிய வேளாண் சந்தை) அறிமுக விழாவில் விவசாயிகளிடையே பிரதமர் உரை

இ-என்.ஏ.எம். (தேசிய வேளாண் சந்தை) அறிமுக விழாவில் விவசாயிகளிடையே பிரதமர் உரை


இ-என்.ஏ.எம். எனப்படும் தேசிய வேளாண் சந்தைக்கான இ&வர்த்தக மேடையின் அறிமுக விழாவுக்காக கூடியிருந்த விவசாயிகளிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

8 மாநிலங்களைச் சேர்ந்த 21 சந்தைகள் இன்று முதல் இ-என்.ஏ.எம்-மில் இணைந்துள்ளன.

இந்த முயற்சி வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கும் என்றும் அது விவசாயிகளுக்கு பெரும் பயன்களை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் சமூகத்திற்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று திரு. நரேந்திர மோடி கூறினார். வேளாண்மைத் துறை முழுமையாக கவனிக்கப்படவேண்டும் என்றும், அது மட்டுமே, விவசாயிகளுக்கு அளிகபட்ச பயன்களை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்து அவர்களிடையே விளக்கிய பிரதமர், வேளாண் வருவாயை உயர்த்துவதற்கு இன்னும் என்ன செய்யலாம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.