பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி ஆகியவற்றுக்கான தேசிய திறன் மையம் (ஏ.வி.ஜி.சி-எக்ஸ்ஆர்) நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் பிரிவு 8-ன் கீழ் இந்தியாவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது . நாட்டில் ஏ.வி.ஜி.சி பணிக்குழுவை அமைப்பதற்கான மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகார அமைச்சரின் 2022-23 பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் மும்பையில் தேசிய திறன் மையம் அமைக்கப்படும்.
ஏ.வி.ஜி.சி-எக்ஸ்.ஆர் துறை, இன்று திரைப்படத் தயாரிப்பு, ஓவர் தி டாப் (ஓடிடி) தளங்கள், கேமிங், விளம்பரங்கள் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் பிற சமூகத் துறைகள் உள்ளிட்ட பல துறைகள் உட்பட ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முழு சாம்ராஜ்யத்திலும் இன்றியமையாத பங்கைக் கொண்டுள்ளது.
இந்த தேசிய திறன் மையத்தை ஏவிஜிசி – எக்ஸ் ஆர், தொழில்துறையின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாக நிலைநிறுத்துவதன் மூலம், இது நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரங்களில் ஒன்றாக செயல்படும். இது படைப்பாற்றல் கலை மற்றும் வடிவமைப்புத் துறைக்கு மகத்தான உந்துதலைக் கொடுக்கும் தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் ஏவிஜிசி-எக்ஸ்ஆர் நடவடிக்கைகளுக்கான மையமாக இந்தியாவை மாற்றும்.
—
IR/KPG/DL
The Cabinet approval to establish the National Centre of Excellence for Animation, Visual Effects, Gaming, Comics and Extended Reality is great news for the world of media and entertainment. The eco-system of creators will get a big boost and many more job opportunities will be…
— Narendra Modi (@narendramodi) September 18, 2024