Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.

 

ஒரே நேரத்தில் தேர்தல்: உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள்

 

1.         1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

2.         சட்ட ஆணையம்: 170 வது அறிக்கை (1999): ஐந்து ஆண்டுகளில் மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே தேர்தல்.

3.         நாடாளுமன்றக் குழுவின் 79-வது அறிக்கை (2015): ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தல்.

4.         திரு. ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, அரசியல் கட்சிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசனை நடத்தியது.

5.         இந்த அறிக்கை ஆன்லைனில் கிடைக்கிறது:https://onoe.gov.in

6.         நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு பரவலான ஆதரவு இருப்பதாக விரிவான பின்னூட்டங்கள் காட்டுகின்றன.

 

பரிந்துரைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி

  1. இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவும்.
  2. முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
  3. இரண்டாம் கட்டமாக: பொதுத் தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்த வேண்டும்.
  4. அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல்.
  5. நாடு முழுவதும் விரிவான விவாதங்களுக்கு வழிவகுக்கும்.
  6. செயல்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும்.

 

***

MM/RR/DL