பி.எம்.இந்தியா
ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத்தொகை திட்டங்களை தடை செய்யும் மசோதா 2019-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத் தொகை திட்டங்களை தடை செய்யும் அவசரச் சட்டத்திற்கு பதிலாக இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
******