Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் பிரதமர் மகாபூஜை மற்றும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்

குஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் பிரதமர் மகாபூஜை மற்றும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்


குஜராத் சோம்நாத் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி  மகாபூஜை மற்றும் கும்பாபிஷேகத்தில் இன்று (11.05.2026) கலந்து கொண்டார்.

இது தமது வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிகரமான  மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும் என்று  பிரதமர் தெரிவித்தார். சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியில் மகாதேவரை பிராத்தித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் தரிசனமும் பூஜையும் எல்லையற்ற ஆன்மீக சக்தியின் ஆதாரமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியில் மகாதேவரை பிரார்த்தித்தது நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். மகாதேவரின் தரிசனம் எல்லையற்ற ஆன்மீக சக்தியின் ஆதாரமாகும்.”

 

——

(Release ID 2259789)

SS/IR/KPG/SH