Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குவஹாத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகம் – பிரதமர் அடிக்கல் நாட்டினார் ; இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கிழக்கு மத்திய பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல்

குவஹாத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகம் – பிரதமர்  அடிக்கல் நாட்டினார் ; இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கிழக்கு மத்திய பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல் <BR><BR>

குவஹாத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகம் – பிரதமர்  அடிக்கல் நாட்டினார் ; இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கிழக்கு மத்திய பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல் <BR><BR>

குவஹாத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகம் – பிரதமர்  அடிக்கல் நாட்டினார் ; இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கிழக்கு மத்திய பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல் <BR><BR>


இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கிழக்கு மத்திய பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் 21-வது நூற்றாண்டு அறிவு சார்ந்த நூற்றாண்டு என்று கூறினார். மேலும், வரலாற்றில் உலகிற்கு அறிவு சார் திறன் முக்கிய தூண்டுகோலாக இருந்த சமயங்களில் இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இன்று உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இளைய நாடாக விளங்கும் இந்தியா, இளைய கனவுகள் மிகுந்த சக்தியாகவும் விளங்குகிறது. தற்போது உலகின் முன்னணி பங்கு வகிக்க வேண்டும் என்பது இந்தியாவின் சவாலாகவும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

பல்வேறு சர்வதேச பொருளாதார கணக்கெடுப்புகள், இந்தியா வேக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு இளைஞர்களை முக்கியமாக கருதி பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் கூறினார். திறன்மேம்பாடு, இந்தியாவில் உற்பத்தி செய்வோம், தொடங்கிடு இந்தியா ஆகியவற்றிற்காக அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் கூறினார்.

மின்னணு, பாதுகாப்பு சாதன உற்பத்தி ஆகிய துறைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

•••••••