Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப்’ பிரதமர் பார்வையிட்டார்


‘கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப்’ பிரதமர் இன்று பார்வையிட்டார். நாடு முழுவதிலும் இருந்து கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களின் அரங்குகளை அவர் பார்வையிட்டார். இந்தியா கேட் முகப்பில் 250-க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பங்கேற்றுள்ள கலைஞர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் ஆவர். கண்காட்சியில் பங்கேற்றுள்ள கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.

அழிவின் விளிம்பில் இருக்கும் பல வகையான இந்திய உள்நாட்டுப் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இவற்றில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டைக் ‘கைவினைப் பொருட்கள் கண்காட்சி’ பிரதிபலிக்கிறது.

இந்த ஆண்டின் கைவினைப்பொருட்கள் கண்காட்சிக்கான மையக்கருத்து ‘திறனுக்கான பணி’ என்பதாகும். கடந்த 3 ஆண்டுகளில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமான கைவினைக் கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளில் ஏராளமான பெண் கலைஞர்களும் அடங்குவர்.